tamilnadu

img

துப்பாக்கியால் சுட்டு சாஸ்திர பூஜையாம்..!

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலத்தில் துப்பாக்கியால் சுட்டு, பூஜை நடத்தியதாக விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் நிர்வாகிகள் உட்பட 150 பேர் மீது வழக்‍கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள பள்ளியொன்றில் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் நிர்வாகிகள் சாஸ்திர பூஜை என்ற பெயரில் விழா கொண்டாடியுள்ளனர். அந்த பூஜையின் போது, சிலர் துப்பாக்‍கியால் வானத்தை நோக்கி சுட்டு விளையாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும் பரவிய நிலையில், அது காண்போரை அதிர்ச்சியடைய செய்தது.இதையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தி சாஸ்திர பூஜை கொண்டாடிய சம்பவத்தில், 150 பேர் மீது மத்தியப்பிரதேச மாநில போலீசார் வழக்‍குப்பதிவு செய்துள்ளனர்.மத்தியப்பிரதேச மாநிலத்தில் தற்போது கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

;